புஷ்பா 2 ஷூட்டிங் நிறுத்தம்: இயக்குனர் கேஜிஎப் 2 பார்த்துவிட்டு எடுத்திருக்கும் அதிரடி முடிவு
புஷ்பா படம் இந்த வருடம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஹிட் அடித்த படங்களில் ஒன்று. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். சமந்தா ஒரு பாட்டுக்கு மாட்டும் ஆடிய நிலையில் அது மிகபெரிய ஹிட் ஆனது.
முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் என்பதால் இரண்டாம் பாகத்திற்கு இன்னும் அதிக பட்ஜெட் ஒதுக்கி மிக பிரமாண்டமாக எடுக்க தொடங்கினார்கள். ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அது நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல் வந்திருக்கிறது.
புஷ்பா படத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸை விட தற்போது கேஜிஎப் 2 பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்று வருகிறது. அதனால் புஷ்பா 2 இன்னும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறாராம் இயக்குனர் சுகுமார்.
அதனால் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு படத்தின் ஸ்கிரிப்டில் சில மாறுதல்கள் செய்யும் பணியில் இறங்கி இருக்கிறாராம். அதனால் புஷ்பா 2 விரைவில் இன்னும் அதிகம் பிரம்மாண்டத்தோடு தொடங்கும் என தெரிகிறது.
