ரஜினியுடன் இரவு நேரத்தில் பைக்கில் சென்னையை சுற்றிய நடிகை.. நேரில் பார்த்த அனிருத்தின் தந்தை
ரஜினிகாந்த்
இந்திய சினிமாவே சூப்பர்ஸ்டார் என தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் 2.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இப்படம் வெளிவரவிருக்கிறது. கண்டிப்பாக இப்படம்தான் தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி படமாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தனது 173வது படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இதுமட்டுமின்றி ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து மீண்டும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கமலுடன் இணைந்து ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான அறிவிப்பு இந்த ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.
பைக்கில் சென்னையை சுற்றினோம்
ரஜினியுடன் இணைந்து பணியாற்றிய பிரபலங்களில் ஒருவர் நடிகை ராதிகா. இவர் ரஜினியுடன் இரவில் சென்னையை சுற்றி பார்த்த அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, "நானும் ரஜினியுடன் அவருடைய பைக்கில் இரவு நேரத்தில் சென்னையை சுற்றி கொண்டு இருப்போம். ஒருநாள் ஒரு கார் எங்களை நோக்கி வேகமாக வந்து சடன் பிரேக் அடித்து நின்றது. அது யார் என்று பார்த்தால், ரஜினியின் மனைவி லதாவின் சகோதரர் ரவி ராகவேந்தர் (அனிருத்தின் தந்தை). ரஜினி நடுராத்திரியில் ஒரு பெண்ணுடன் பைக்கில் சுற்றி கொண்டு இருக்கிறார் என்ற எண்ணத்தில் காரை நிறுத்தி உள்ளார். ஆனால், நானும் ரஜினியும் வந்தது லதாவுக்கு தெரியும்" என கூறியுள்ளார்.
திமுகவுக்கும், த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி! அ.தி.மு.க. ஒரு கட்சியே கிடையாது: செங்கோட்டையன் IBC Tamilnadu