திருமணத்தில் சமந்தாவிற்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்துள்ள ராஜ் நிடிமோரு... என்ன தெரியுமா?
சமந்தா
நடிகை சமந்தா, பல்லாவரத்து பெண் என தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடப்படும் பிரபலம்.
மாடலிங் துறையில் ரூ. 500 முதல் சம்பளம் பெற்றவர் இப்போது பிரபல நடிகையாக, தொழிலதிபராக பல கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கலக்கும் சமந்தாவிற்கு ஹாலிவுட் வாய்ப்பு கூட வந்தது, ஆனால் இடையில் உடல்நலப் பிரச்சனை வர வீட்டிலேயே முடங்கினார். தமிழில் அவர் நடிப்பில் படங்கள் வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்டது என்று தான் கூற வேண்டும்.

மறுமணம்
சமந்தா, தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்தார், ஆனால் சில காரணங்களால் பிரிந்தனர்.
இந்த நிலையில் நடிகை சமந்தா, ராஜ் நிடிமோரு என்பவரை மறுமணம் செய்துகொண்டார். திருமண புகைப்படங்களை சமந்தா வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தனர்.

தற்போது என்னவென்றால் திருமணத்தின் போது சமந்தாவிற்கு அவரது கணவர் விலையுயர்ந்த பரிசு ஒன்று கொடுத்துள்ளார்.
அதாவது ஹைதராபாத்தில் Jubilee Hillsல் ஒரு பெரிய பங்களாவை சமந்தாவிற்கு பரிசாக கொடுத்துள்ளாராம் ராஜ் நிடிமோரு.