பொன்னியின் செல்வன் பற்றி பேசிய ராஜமௌலி! 10 வருடங்கள் முன்பே என்ன கூறி இருக்கிறார் பாருங்க
பொன்னியின் செல்வன்
இன்று பொன்னியின் செல்வன் படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வந்திருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த படத்தை தெலுங்கு படமான பாகுபலி உடன் ஒப்பிட்டு தான் அதிகம் பேர், குறிப்பாக தெலுங்கு ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார்கள்.
மணிரத்னம் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் "பொன்னியின் செல்வன் ஒரு எதார்த்தமான படைப்பு, பாகுபலி போல இதில் ஒரு fantasy உலகம், சூப்பர்ஹீரோ கதை இருக்காது" என தெரிவித்து இருக்கிறார். இருப்பினும் இந்த இரண்டு படங்கள் பற்றிய ஒப்பீடு தற்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அப்போதே சொன்ன ராஜமௌலி..
இந்நிலையில் பாகுபலி இயக்குனர் ராஜமௌலி 2011ல் பதிவிட்ட ஒரு ட்விட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் "Read ponniyin selvan. Amazing novel drama and characters" என குறிப்பிட்டு இருக்கிறார்.
தற்போது இந்த பதிவு அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
@vijay_poo Read ponniyin selvan. Amazing novel drama and characters.
— rajamouli ss (@ssrajamouli) June 30, 2011
Also Read: செயினை அடமானம் வைத்து இப்படி செய்தேன்.. PS 1க்கு கூல் சுரேஷ் அட்ராசிட்டி