பணம் கேட்டும் ரஜினி, விஜய் உதவி செய்யல..மார்பக புற்றுநோயால் மறைந்த நடிகையின் நண்பர்கள் பேட்டி
சிந்து
வசந்த பாலன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் அங்காடித் தெரு. இப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்து பிரபலமானவர் தான் சிந்து.
இப்படத்தை தொடர்ந்து கருப்பசாமி குத்தகைதாரர் என்ற படத்திலும் மேலும், சில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்.

உதவி செய்யவில்லை
கடந்த 2020-ஆம் ஆண்டு சிந்துவுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
மூன்று ஆண்டுகளாக அவரது நண்பர்கள் பணம் கொடுத்து சிகிச்சைக்கு உதவி செய்துள்ளனர். இந்நிலையில் சிந்து சிகிச்சை பலனின்றி (07-8-2023) அன்று உயிரிழந்தார். இவருக்கு ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வந்தனர்.
தற்போது பேட்டி அளித்த சிந்துவின் நண்பர்கள், " திரைபிரபலங்கள் மற்றும் மக்கள் தனக்கு உதவ வேண்டும் என்று சிந்து கோரிக்கை வைத்திருந்தார். சிலர் மட்டும் தான் உதவி செய்தனர். அஜித், விஜய், ரஜினி போன்றவர்கள் உதவி செய்யவில்லை, அவர்கள் உதவி செய்து இருந்தால் சிந்து உயிர் பிழைத்திருப்பார்" என்று கூறியுள்ளனர்.

படம் மீதான நம்பிக்கை போச்சு!. இனி மகள் பேச்சை கேட்க மாட்டேன்..ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த் பேச்சு