கமலை பாராட்ட நேரம் காலம் பார்க்காத சூப்பர் ஸ்டார் ரஜினி ! பல வருடங்களுக்கு முன் நடந்த சுவாரஸ்யமான விஷயம்..
கமல் - ரஜினி
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் பல வருடங்களாக தமிழ் சினிமாவின் இரு தூண்களாக திகழ்ந்து வருபவர்கள். இத்தனை வருடங்கள் ஆகியும் கூட இவர்களின் திரைப்படங்கள் இப்போதுள்ள நடிகர்களின் திரைப்படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸில் போட்டி போட்டு கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான கமலின் விக்ரம் திரைப்படம் தமிழகத்திலே அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி ரஜினியின் 2.0 படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையும் படைத்திருக்கிறது.
உச்ச நட்சத்திரங்களான ரஜினி மற்றும் கமல் திரையுலகின் நல்ல நண்பர்கள் என அனைவரும் அறிந்த விஷயம், அப்படி அவர்கள் இருவரும் அரம்ப காலத்தில் திரைப்படங்களில் ஒன்றாக நடித்து வந்து பிறகு அவர்கள் இருவரும் தங்களுக்கென தனித்தனி பாதையை தேர்ந்தெடுத்து கொண்டார்கள்.
மேலும் கமல் படத்தை பார்த்து ரஜினியும், ரஜினி படத்தை பார்த்து கமலும் பாராட்டி வருவதை பார்த்துள்ளோம், அப்படி பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம் தான் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.
ஆம், கடந்த 1989 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் அபூர்வ சகோதர்கள் படம் வெளியானபோது ரஜினி தன் பட ஷூட்டிங்கில் இருந்திருக்கிறார். ஆனாலும் மனசெல்லாம் கமல் படம் மீதே இருந்திருக்கிறது. பின் ஷூட்டிங் முடிந்ததும் இரவு 11 மணி காட்சியை பார்த்து ரசித்திருக்கிறார் ரஜினி.
அவருக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது. உடனே கமலை சந்தித்து பாராட்ட துடித்திருக்கிறார். அப்பொழுது மணி 2.30. இருந்தாலும் கமல் வீட்டிற்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பி பாராட்டியிதாக ஒரு தகவல் இணையத்தில் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
அஞ்சான் படத்தின் தோல்விக்கு இதுதான் காரணம்.. முதல் முறையாக கூறிய இயக்குனர் லிங்குசாமி