இதுவரை பணியாற்றாத இரண்டு தயாரிப்பாளர்கள்! அடுத்தடுத்த இரண்டு திரைப்படங்களை கொடுத்த ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக தனது திரைப்படங்களின் மூலம் மிக வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கடைசியாக இவர் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி படுதோல்வியடைந்தது, அதனை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. இதில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இரண்டு திரைப்படங்கள்
இந்நிலையில் தற்போது ரஜினி இதுவரை தனது திரையுலகில் பணியாற்ற தவறிய இரண்டு தயாரிப்பாளர்கள் ஆஸ்கார் ரவிசந்திரன் மற்றும் பஞ்சு அருணாசலம்.
அவர்களுகாக அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் ரஜினி நடிக்கவுள்ளாராம், மேலும் உதவியாக அந்த திரைப்படங்களில் பாதி சம்பளத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இணையத்தில் கசிந்த வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ