சினிமாவில் இருந்து விலக முடிவேடுத்த ரஜினி ! பாபா திரைப்படத்திற்கு பின் எழுந்த சர்ச்சை
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் உலகளவில் எந்தளவிற்கு வரவேற்பை பெற்றது என அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
மேலும் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
ஜக்குபாய்
இந்நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பாபா, அப்படம் வெளியான பின் ரஜினி சினிமாவில் இருந்து விலகி அரசியலில் நுழையவுள்ளதாக பெரிய சர்ச்சை எழுந்தது.
அப்போது தான் ரஜினி - கே.எஸ்.ரவிகுமார் கூட்டணியில் ஜக்குபாய் என்ற திரைப்படம் உருவாகவுள்ளதாக ஆச்சரியமளிக்கும் வகையில் அப்பட ஃப்ர்ஸ்ட் லுக் உடன் வெளியானது. ஆனால் அப்படம் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானதுடன் அப்படியே கைவிடப்பட்டது.
மேலும் அப்படம் கைவிடப்பட்டது குறித்து பேசிய ரஜினி அப்படத்தின் கதை ஒரு ப்ரென்ச் படத்தை பார்த்து உருவாக்கப்பட்டது என்றும் ஜக்குபாய் திரைப்படம் பாட்ஷா போலவே இருந்ததாகவும் பேசியுள்ளார்.
எழுந்திருக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அஜித்