ஹீரோயின்களை அதற்காக மட்டும் பயன்படுத்தி கொள்கின்றனர்.. ரஜினி பட நடிகை ராதிகா ஆவேசம்!
ராதிகா ஆப்தே
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராதிகா ஆப்தே. இவர் Vaah Life Ho Toh Aisi என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்தி மட்டுமின்றி மராத்தி, பெங்காலி போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.
தமிழில் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான தோனி படத்தின் மூலம் அறிமுகமான ராதிகா அப்டே, அதன்பின் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், ஆகிய படங்களில் நடித்தார்.
ஆனால், இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல பிரபலத்தை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது சூப்பர்ஸ்டார் ரஜினியின் கபாலி திரைப்படம் தான். பா. ரஞ்சித் இயக்கிய இப்படத்தில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.
ஆவேசம்!
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் ராதிகா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " ஹீரோக்களுக்காக மட்டும் தான் படம் எடுக்கிறார்கள். ஹீரோயின்களை வைத்து நடன காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகளுக்கு பயன்படுத்தி கொள்கின்றனர்.
மற்றபடி, படம் ஹீரோக்களுக்காக மட்டும் தான் எடுக்கின்றனர். நடிகைகளுக்கு முக்கிய துவம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.