மாறுவேடத்தில் சென்ற ரஜினிகாந்த்.. ஆட்டோவில் தப்பித்து சென்ற சம்பவம்
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி நடிகர் ஆவார். இவர் நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.

ரஜினிகாந்த் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் இதுவரை வெளிவந்துள்ளது. அதன்படி, நடிகர் ரஜினிகாந்த் படம் பார்க்க மாறுவேடத்தில் சென்ற சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மாறுவேடத்தில் சென்ற ரஜினிகாந்த்
ஒருமுறை தன்னுடைய திரைப்படத்தை மாறுவேடத்தில் சென்றுள்ளார். கேப், கண்ணாடி எல்லாம் அணிந்துகொண்டு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு திரையரங்கிற்கு சென்று படம் பார்த்துள்ளார் ரஜினி.

முழு படத்தையும் பார்த்த ரஜினி திரையரங்கிற்கு வெளியே வந்துள்ளார். அந்த சமயத்தில் ஒரு ரசிகர் தலைவா என அழைத்துள்ளார். இதை காதில் வாங்கிய ரஜினி, மாட்டிகிட்டோமே என மிரண்டு போய் பதட்டத்துடன் திரும்பி பார்த்துள்ளார்.

ஆனால் ஒரு ரசிகர் தன் நண்பர் ஒருவரை தான் தலைவா என அழைத்திருக்கிறார். அதன் பிறகு ரஜினி ஒரு ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இந்த தகவலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video