ஆலியா பட் திருமணம்! ஒரே ஒரு பிரபலத்தை மட்டும் அழைக்கவில்லையா?
பாலிவுட் நடிகை ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் தற்போது காதலித்து வருகின்றனர். ரன்பீருக்கு 39 வயதாகும் நிலையில் அவர் 29 வயதாகும் ஆலியாவை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்.
திருமணத்திற்கு பிரம்மாண்ட ஏற்பாடு
ரன்பீர் - ஆலியா பட் திருமணம் ஏப்ரல் 17ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்காக மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறதாம். மிக முக்கியமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே திருமணத்திற்காக அழைக்கப்பட்டு இருக்கிறார்கள் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருக்கிறது.
கரண் ஜோகர், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பலரும் திருமணத்தில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இவர்களுக்கு அழைப்பில்லை
ரன்பீரின் முன்னாள் காதல் கத்ரீன் கைப்புக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை என தகவல் பரவி வருகிறது. அவர் மட்டுமின்றி சல்மான் கான், கங்கனா, சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோருக்கு அழைப்பு இல்லை என கிசுகிசுக்கப்படுகிறது.

லேசா லேசா பட நடிகர் மருத்துவமனையில் கவலைக்கிடம்! ரசிகர்கள் அதிர்ச்சி