வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு படங்களில் நடிக்க தடை? ஷாக் கொடுத்த செய்தி
ராஷ்மிகா மந்தனா
இந்தியளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

விஜய்யுடன் இவர் இணைந்து நடிக்கும் முதல் படமாகும் இது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா தனது திரையுலக பயணத்தை முதன் முதலில் கன்னட சினிமாவில் இருந்து தான் துவங்கினார்.
கன்னடத்தில் அறிமுகம்
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளிவந்த க்ரிக் பார்ட்டி எனும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ராஷ்மிகா.

இப்படத்தில் நடித்தபோது கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டியுடன் மலர்ந்த காதலால் அவருடன் திருமணம் வரை சென்றார். ஆனால், திடீரென இந்த திருமணத்தில் இருந்து பின்வாங்கிவிட்டார் ராஷ்மிகா.
படங்களில் நடிக்க தடையா?
இந்நிலையில், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் படத்தை குறித்து பேசிய ராஷ்மிகா, அப்படத்தின் இயக்குனர் குறித்தும் ஹீரோ குறித்தும் பேசவில்லை என கூறப்படுகிறது.

இதனால் கடுப்பான கன்னட ரசிகர்கள் தன்னை வளர்த்துவிட்ட திரையுலகை மறந்துவிட்டு தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
இதனால், கன்னட திரையுலகம் இனிமேல் நடிகை ராஷ்மிகா கன்னடத்தில் நடிக்க தடை விதிக்கும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கபோகிறது என்று..