எதிர்நீச்சல் சீரியலின் புதிய வில்லன் ராவணன் ஆதிமுத்துவின் மனைவி யார் தெரியுமா? ஷாக் கொடுத்த புரோமோ
எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியின் வரவிற்கு பின் ஆதி குணசேகரன் ஆளே மாறிவிட்டார். தனது மனைவிக்கு மரியாதை தரவேண்டும் என தம்பிகளிடம் கூறினார்.

இந்த நிலையில், புதிதாக ராவணன் ஆதிமுத்து என்கிற வில்லன் எதிர்நீச்சல் சீரியலில் களமிறங்கியுள்ளார். தான் சிறு வயதில் பட்ட கஷ்டத்திற்கு பதிலடி கொடுக்கவே தற்போது இவர் என்ட்ரி கொடுத்துள்ளார். இவருடைய வருகையை அறிந்து, கொடூரமான ஒருவன் வரப்போகிறான், அதற்காக எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என கலெக்டர் மதிவதனி கூறுகிறார்.
ராவணன் ஆதிமுத்துவின் மனைவி
மதிவதனியின் மகள் தனது கையில் ஒரு போட்டோவுடன் வந்து "அப்பாவும் நீயும் ஒண்ணா குடும்பமா இல்ல, நீ தனியா அப்பா தனியா இருக்கீங்க ஏன்?" என்று கேட்கிறார். அதன்பின், மதிவதனி கையில் அவரது மகள் ஒரு போட்டோவை தருகிறார். அது ராவணன் ஆதிமுத்து - மதிவதனியின் திருமண புகைப்படம். ஆம், ராவணன் - மதிவதனி இருவரும் கணவன் மனைவி. இந்த ட்விஸ்டை எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்கவே இல்லை.

ராவணன் ஆதிமுத்துவின் என்ட்ரி, அவர் மதிவதனியின் கணவர் என தொடர்ந்து பரபரப்பான நகரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்னென்ன சுவாரஸ்யங்கள் காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri