பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகியதற்கு முக்கிய காரணம்- கண்மணி சொன்ன தகவல்
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட்டான தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. மலையாள தொடரின் ரீமேக்கான இந்த சீரியலில் அருண் மற்றும் ரோஷினி முக்கிய வேடத்தில் நடித்து வந்தனர்.
பின் ரோஷினி வெளியேற அடுத்தடுத்து கண்மணி, அகில் ஆகியோரும் வெளியேறி இருந்தார்கள். ஆனால் 3 பேருமே வெளியேறியதற்கான சரியான காரணம் தெரியவில்லை.
இந்த நிலையில் நடிகை கண்மணி பாரதி கண்ணம்மா தொடர் குறித்து பேசியுள்ளார்.
விலகியது ஏன்
பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற வேடத்தில் 3 வருடங்களாக நடித்து வந்தேன். இந்த தொடருக்காக நான் நிறைய வாய்ப்புகளை இழந்தேன். அடுத்த கட்டத்திற்கு என பயணத்தை தொடரவே இதில் இருந்து விலகினேன்.
அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற தொடரில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனவே தொடரில் இருந்து விலகினேன் என கூறியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனை போலவே அவரது மகன், முதன்முறையாக வெளியான புகைப்படம்- கியூட் போட்டோ