இயக்குனர் மிஷ்கின் விஜய்யிடம் கதை சொல்லாததற்கு இது தான் காரணமாம் !
முக்கிய இயக்குனரான மிஷ்கின்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி கொண்டு, தனி ஸ்டைலில் தனது படங்களை இயக்கி வரும் இயக்குனர் தான் மிஷ்கின்.
இவர் இயக்கத்தில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் தில்லர் திரைப்படங்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில் கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான சைக்கோ திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது, சைக்கோ கொலைகாரன் குறித்த படமான இது அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து தற்போது இவர் பிசாசு படத்தின் இரண்டாம் பாகமான பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார், இப்படத்தில் ஆண்ட்ரியா மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய்யிடம் சொல்லாத கதை
இதனிடையே சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் இயக்குனராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் அறிமுக திரைப்படமான சித்திரம் பேசுதடி படத்தை நடிகர் விஜய்யை மனதில் வைத்து தான் எழுதினாராம்.
ஆனால் விஜய் மற்றும் அவரின் தந்தை SAC அப்படத்தின் கதையில் மாற்றம் சொல்வார்கள் என்பதால் அவர் விஜய் கதை சொல்ல போகவில்லை, என ஒரு தகவலும் உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நட்சத்திரங்களின் ரீ-யூனியன் ! பார்ட்டியில் அவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோஸ்..