ரோகிணி கொடுத்த ரூ. 5 லட்சம்.. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல்

By Karthick Raja Apr 30, 2026 04:40 AM GMT
Report

கைது செய்யப்பட்ட மனோஜ் 

அண்ணாமலைக்கு தெரியாமல் அவருடைய கையெழுத்தை போட்டு பித்தலாட்டம் செய்ததால், பைனாசியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் மனோஜை கைது செய்தது. வழக்கறிஞர் வந்து மனோஜை பெயிலில் விட சொல்லியும் முடியாது என போலீஸ் மறுத்துவிட்டனர்.

ரோகிணி கொடுத்த ரூ. 5 லட்சம்.. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் | Rohini Gets Manoj Out Of Police Station

இதற்கு ஒரே வழி அந்த பைனாஷியர் இந்த புகாரை வாபஸ் வாங்குவது மட்டுமே என வழக்கறிஞர் கூறிவிட்டார். இதன்பின், மீனா - முத்து அந்த முயற்சியில் இருக்கும் நிலையில், ரோகிணி நேரடியாக அந்த பைனான்சியரிடம் சென்று கெஞ்சி கேட்கிறார். காலில் விழுந்து கூட கேட்டு பார்த்தும், அந்த பைனான்சியர் புகாரை வாபஸ் வாங்க மாட்டேன் என கூறிவிட்டார்.

ரோகிணி கொடுத்த ரூ. 5 லட்சம்.. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் | Rohini Gets Manoj Out Of Police Station

தளபதி விஜய்யை நேரில் சந்தித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. புகைப்படம் இதோ

தளபதி விஜய்யை நேரில் சந்தித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. புகைப்படம் இதோ

இதன்பின் அந்த பைனான்சியர் சிந்தாமணிக்கு கால் செய்து பேசுகிறார். ரோகிணியிடம் ரூ. 10 லட்சம் கேள் என சிந்தாமணி கூற, அதன்படியே ரூ. 10 லட்சத்தை தற்போது தந்தால் மனோஜ் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறுகிறேன் என அந்த பைனான்சியர் கூறுகிறார்.

ரோகிணி கொடுத்த ரூ. 5 லட்சம்.. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் | Rohini Gets Manoj Out Of Police Station

ரோகிணி கொடுத்த ரூ. 5 லட்சம்

இதனால், உடனடியாக அந்த பணத்தை தயார் செய்ய ரோகிணி முயற்சி எடுக்கிறார். இதில், அவருக்கு ரூ. 5 லட்சம் மட்டுமே கிடைக்க, அந்த பணத்தை வாங்கிக்கொண்டு மனோஜ் மீது போலீசில் கொடுத்த புகாரை பைனான்சியர் வாபஸ் பெறுகிறார்.

ரோகிணி கொடுத்த ரூ. 5 லட்சம்.. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் | Rohini Gets Manoj Out Of Police Station

ரோகிணி மனோஜ் மீது வைத்துள்ள காதலை புரிந்துகொண்டேன், அதனால்தான் இந்த புகாரை வாபஸ் பெறுகிறேன் என அந்த பைனான்சியர் கூறுகிறார் இதன்பின், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வரும் மனோஜ், ரோகிணிக்கு நன்றி சொல்ல, இதை பார்க்கும் மீனா மற்றும் முத்து இருவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

ரோகிணி கொடுத்த ரூ. 5 லட்சம்.. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் | Rohini Gets Manoj Out Of Police Station

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US