தனது மகன் விஜய் குறித்த சமீபத்திய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த SAC ! என்ன சொன்னார் தெரியுமா?
விஜய் குறித்து SAC
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தாலும் உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது. அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே சமீபத்தில் விஜய்யிடன் தந்தை SAC தனது மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படமும், திருக்கடையூர் சென்ற போது அவர்களின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகின.

அதற்கு விஜய் பெத்தவங்க பிறந்தநாளுக்குக்கூட நேரில் வாழ்த்தவில்லையே என பல்வேறு விமர்சனங்கள் விஜய் மீது வைக்கப்பட்டது குறித்து SAC-யிடம் கேட்டக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள அவர் “விஜய் வாழ்த்தினாரா, கல்யாணத்திற்கு வந்தாரா வரவில்லையா என்பதெல்லாம் அப்பா - பிள்ளைக்குள் நடக்குற தனிப்பட்ட விஷயம். விஜய் ஒரு மாஸ் ஹீரோ. நாங்கள் அங்கு சென்றதுக்கே செம கூட்டம்.
விஜய் வந்திருந்தால் என்ன ஆகிருக்கும் ? விஜய் ஹைதராபாத் ஷூட்டிங்கில் உள்ளார். ஷூட்டிங்கை பிரேக் செய்துவிட்டு வரவேண்டுமா? அவரின் வருகை தேவை இல்லாமல் பெரிய கூட்டத்தை ஈர்த்திருக்கும்” என தெரிவித்துள்ளார் SAC.

பிக் பாஸ் சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய சல்மான் கான்! ஒரு வாரத்திற்கு இத்தனை கோடியா