தி வாய்ஸ் ஆஃப் உமன் அறிக்கையை வெளியிட வேண்டும்.. நடிகை சமந்தா வெளியிட்ட அதிரடி பதிவு
ஹேமா கமிட்டி
மலையாள சினிமாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமையை கண்டித்து பல நடிகர் மற்றும் நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர். ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை தற்போது மிகப்பெரிய அதிர்வலையை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தியுள்ளது.

அதை தொடர்ந்து மலையாள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டு அதன் தலைவரான மோகன்லால் ராஜினாமா செய்தார். இது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார்.
சமந்தா பதிவு
அதில், கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கையைப் போல தெலுங்கு திரையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் தொடர்பாக விசாரித்த குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கேரளாவின் wcc என்ற அமைப்பை தாம் வரவேற்பதாகவும் அதுபோலவே, தெலுங்கானா அரசும் தி வாய்ஸ் ஆஃப் உமன் அமைப்பின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும், அப்போது தான் தெலுங்கு சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan