அந்த மோசமான நாட்கள்.. அதெல்லாம் மறக்க முடியாது! - முதல் முறையாக மனம் திறந்த சமந்தா
சமந்தா
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் யசோதா திரைப்படம் வெளியானது.
இதைதொடர்ந்து இவர் நடிப்பில் புராண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள 'சாகுந்தலம்' திரைப்படம் வரும் பிப்ரவரி 17 -ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மோசமான நாட்கள்
சமீபத்தில் சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதில் இருந்து மீண்டு வரும் இவர் தற்போது போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் " நீ விரைவில் குணம் அடைவாய் என்று நான் உறுதியாக கூறுகிறேன். இந்த 7 - 8 மாதங்களில் நீ பல மோசமான நாட்களை பார்த்துவிட்டாய், அதில் இருந்து மீண்டு வந்துள்ளாய். அதை நீ மறக்க கூடாது. இந்த மோசமான நாட்களை நீ நினைவில் வைத்துக்கொள். நீ உன்னை நினைத்து பெருமை படு. நீ ஒரு வலிமையானவள் " என்று தனக்குத்தானே அறிவுரை கூறியுள்ளார் சமந்தா.
இவர் நாக சைதன்யாவை 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளில் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.
Shocking! சன்னி லியோன் ஷோ நடக்கும் இடத்தில் குண்டுவெடிப்பு