முதல் முறையாக அந்த மாதிரி நடிக்கும் சமந்தா.. ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒன்று
நாயகி
சமந்தா தற்போது இந்தியளவில் பிசியான முன்னணி நடிகையாக மாறிவிட்டார். தமிழ்,தெலுங்கை தாண்டி ஹிந்தியிலும் கால்பதித்துவிட்டார்.
அக்ஷய் குமார், ரன்பீர் கபூர், ஆயுஷ்மான் குரானா என தொடர்ந்து மூன்று முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார்.
இதில் அமர் கவுசிக் இயக்கி வரும் படத்தின் மூலமாக தான் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளாராம் சமந்தா. இப்படத்தின் கதாநாயகன் ஆயுஷ்மான் குரானா.
இப்படியொரு ரோலா
இந்நிலையில், இப்படத்தில் நடிகை சமந்தா இளவரசியாகவும், பேயாகவும் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளாராம்.
முதல் முறையாக பேயாக சமந்தா நடிக்கவிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு எதிர்பார்க்காத சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் சமந்தாவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று..