பள்ளி பருவத்திலே வேலைக்கு சென்ற நடிகை சமந்தா ! முதன்முதலாக வாங்கிய சம்பளம்..
சமந்தா முதன்முதலாக வாங்கிய சம்பளம்
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா, இவருக்கு நடிகர்களுக்கு இணையான ரசிகர்களுக்கு கூட்டம் உள்ளது அனைவரும் அறிந்த விஷயம்.
திருமண முறிவுக்கு பின்னர் பிஸியாக படங்களில் நடித்து வரும் சமந்தா அடுத்தடுத்து தனது திரைப்படங்களை முடித்து வருகிறார்.
அதன்படி காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து சமந்தா, தனது பெரிய பட்ஜெட் திரைப்படமான சகுந்தலம் படத்தையும் முடித்திருந்தார்.
இந்நிலையில் சமந்தா சமீபத்தில் தனது சமூக வலைதள இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார்.
சமந்தா அதில் தான் முதன்முதலில் வாங்கிய சம்பளம் குறித்து பேசியுள்ளார், "எனது முதல் வருமானம் ரூ.500 அது ஹோட்டலில் தொகுப்பாளராக பணிபுரிந்தபோது வாங்கியது. அப்போது தான் 10 அல்லது 11-வது படித்து வந்தேன்" என தெரிவித்துள்ளார்.

விமர்சனங்களை கண்டு கொள்ளாத இயக்குனர் நெல்சன் ! இணையத்தில் அவர் செய்த விஷயம்..