படப்பிடிப்பு தளத்திலேயே தனுஷை ஓங்கி அறைந்த இயக்குனர் செல்வராகவன்- ஏன் தெரியுமா?
செல்வராகவன்-தனுஷ்
அண்ணன்-தம்பிகள் என்று பிரபலமானவர்களில் தனுஷ் மற்றும் செல்வராகவன் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து கொடுத்த படங்கள் அனைத்துமே தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன, நானே வருவேன் போன்ற படங்கள் எல்லாம் ஹிட் லிஸ்ட் தான்.
தற்போது தனுஷை வைத்து ஒரு படம் இயக்கும் போது செல்வராகவன் செய்த விஷயம் குறித்து வெளியாகியுள்ளது.

அடித்த இயக்குனர்
காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் நடிக்கும் போது 17 வயது தானாம். அந்த சிறுவயதில் அவ்வளவு வெயிட்டான கதாபாத்திரத்தை அசால்ட்டாக செய்திருப்பார்.
அதற்கு முழு காரணம் செல்வராகவன் தான், நடிக்கும்போது எத்தனை முறை கண்களை சிமிட்ட வேண்டும் என்பது வரை அவர் சொல்லிக்கொடுப்பார் என தனுஷே ஒரு மேடையில் கூறியிருக்கிறார்.
இப்படத்தில் தனுஷை சோனியா அகர்வால் வீட்டுக்கு அழைத்து செல்லும் காட்சியும், பிரம்மாண்டமான வீட்டை பார்த்ததும் தனுஷ் அந்த ஒரு நடிப்பை கொடுத்திருப்பார்.
அந்த காட்சி நடிக்கும் போது தனுஷ் சரியாக நடிக்கவில்லை என செல்வராகவன் செட்டிலேயே அனைவர் முன்பும் ஓங்கி அறைந்துவிட்டாராம். பின் இருவரையும் படக்குழுவில் இருந்தவர்கள் சமாதானப்படுத்த அதன்பின் படப்பிடிப்பு நடந்துள்ளதாம்.

காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட சிகிச்சை பெற்ற சீரியல் நடிகை ஆல்யா மானசா தற்போதைய நிலையை பார்த்தீர்களா?