வாயை மூடிக்கிட்டு இருக்கனும்.. சிவகார்த்திகேயன்-இமான் சர்ச்சைக்கு சீரியல் நடிகர் பேட்டி
நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி சமீபத்தில் ஒரு சர்ச்சை வைரல் ஆனது. இசையமைப்பாளர் இமான் அளித்த பேட்டி தான் அதற்கு காரணம்.
சிவகார்த்திகேயன் எனக்கு ஒரு பெரிய துரோகம் செய்துவிட்டார். அதை பற்றி வெளியில் சொன்னால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும். அதனால் இந்த ஜென்மத்தில் சிவகார்திகேயன் உடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை என கூறி இருந்தார்.

வாயை மூடிட்டு இருக்கனும்..
இந்நிலையில் விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஹீரோ தீபக் தற்போது சிவகார்த்திகேயன் பற்றி பேட்டி அளித்திருக்கிறார்.
சர்ச்சை பற்றி பேசிய அவர் 'ஒருவர் பற்றி தெரியவில்லை என்றால் பேசவே கூடாது.. வாயை மூடிட்டு இருக்கனும்' என கூறி இருக்கிறார். அவர் விஜய் டிவியில் பணியாற்றிய காலதித்திலேயே சிவகார்த்திகேயன் உடன் பழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu