கியூட்டான புகைப்படத்துடன் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சீரியல் நடிகை அபிநவ்யா- இதோ பாருங்கள்
கியூட்டான ஜோடி
வெள்ளித்திரையில் சில அழகான ஜோடிகள் திருமணம் செய்துகொண்டார்கள், அதேபோல் சின்னத்திரையிலும் அப்படிபட்ட விஷயங்கள் நடந்துள்ளன. அப்படி அண்மையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி தான் தீபக் மற்றும் அபிநவ்யா.
ரசிகர்களால் சின்னத்திரையில் கொண்டாடப்பட்ட இந்த ஜோடி அண்மையில் தான் திருமணம் செய்துகொண்டார்கள்.
திருமண புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களிடம் செம வைரலாகி வந்தது.
அபிநவ்யா பிரியமானவள், கண்மணி, சிவா மனசுல சக்தி, சித்திரம் பேசுதடி போன்ற தொடர்களில் நடித்துள்ளார், இப்போது கயல் தொடரில் நடித்து வருகிறார். நடிப்பதை தாண்டி செய்தி வாசிப்பாளராகவும் உள்ளார்.
தீபக் இப்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 தொடரில் நடித்து வருகிறார்.

புதிய போட்டோஸ்
இவர்களுக்கு ஜனவரி மாதம் திருமணம் நடந்தது, திருமணத்திற்கு பிறகு ஜோடியாக புகைப்படங்கள் வெளியிட்டு வந்தனர். தற்போது அபிநவ்யா கர்ப்பமாக இருக்கிறாராம், கியூட்டான புகைப்படத்துடன் இருவரும் இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளனர்.
பிக்பாஸ் மகேஷ்வரியின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்