சினிமாவை விட்டு அந்த தொழிலுக்கு சென்று இருப்பேன்.. ஷாருக்கான் உருக்கமான பேச்சு
பதான்
பாலிவுட் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ஷாருக்கான். இவர் நடிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் காட்சியில் தீபிகா படுகோன் காவி நிற பிகினியை அணிந்து கவர்ச்சியாக நடித்திருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பதான் படத்தை திரையரங்கில் வெளியிடக் கூடாது என்றெல்லாம் போராட்டம் நடந்தது.
உருக்கமான பேச்சு
இதைதொடர்ந்து பதான் படம் வெளியான 5 நாட்களில் 500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் நேற்று சக்சஸ் மீட் நடந்தது. நடிகர் ஷாருக்கான் பேசும்போது, " நான் சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதற்கு முன்பு என் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் தோல்வியை தழுவியது. இதனால் நான் சினிமாவில் இருந்து விலகி வேறு தொழிலுக்கு சென்றுவிடலாம் என்று நினைத்தேன்.”
”மேலும் நான் ஹோட்டல் பிஸ்னஸ்காக சமையல் எல்லாம் கற்றுக்கொண்டேன். ஆனால் பதான் திரைப்படம் சினிமாவில் மீண்டும் ஒரு வாழ்கையை கொடுத்துள்ளது" என்று உருக்கமாக கூறியுள்ளார்.
தனது குழந்தையை முதன்முறையாக வெளியே அழைத்து வந்த காஜல் அகர்வால்- எங்கே பாருங்க, வீடியோ