பொது இடத்தில் லிப்லாக் முத்தம்.. ட்ரோல் செய்தவர்களுக்கு ஸ்ரேயா சரண் கொடுத்த பதிலடி
நடிகை ஸ்ரேயா சரண் ரஸ்ய நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் மற்றும் தொழிலதிபரை Andrei Koscheev என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது ராதா என்கிற மகளும் இருக்கிறார்.
எல்லோர் முன்பும் முத்தம்
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது அவரது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அது மட்டுமின்றி கணவருடன், குழந்தையுடன் இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரேயா திரிஷ்யம் 2 பட விழாவுக்கு கணவருடன் வந்திருந்தார். அப்போது அவர்கள் இருவரும் எல்லோர் முன்பும் லிப்லாக் முத்தம் கொடுத்துக்கொண்டது வைரல் ஆனது.
ட்ரோல்களுக்கு பதில்
ஸ்ரேயா சரண் மற்றும் அவரது கணவர் பொது இடத்தில் இப்படி செய்ததை நெட்டிசன்கள் மோசமாக ட்ரோல் செய்தனர். இந்திய கலாச்சாரத்திற்கு எதிராக இருப்பதாகவும் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் இந்த விஷயம் பற்றி ஸ்ரேயா பதிலடி கொடுத்திருக்கிறார். சேனல் ஒன்றிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் "இது funny ஆக இருக்கிறது. ஸ்பெஷல் நேரத்தில் கிஸ் செய்வது நார்மல் என கணவர் நினைக்கிறார். அது அழகான விஷயம் என நான் நினைக்கிறேன். மிகவும் natural ஆன ஒரு விஷயத்திற்கு ஏன் ட்ரோல் செய்கிறார்கள் என கணவருக்கு புரியவில்லை."
"இது பரவாயில்லை. நான் மோசமான கமெண்டுகளை படிப்பதில்லை, அதற்கு பதிலளிப்பதும் இல்லை. ட்ரோல் செய்வது அவங்க வேலை, அதை avoid செய்வது என் வேலை. நான் செய்யவேண்டியதை தான் செய்தேன்" என ஸ்ரேயா கூறி இருக்கிறார்.

தாக்கப்பட்ட வெண்பா, கடத்தப்பட்ட ஹேமா.. பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் இப்படி தான் இருக்கும்