‘காட்டுப் பசியில் இருக்கிறேன்’ - நல்ல கதைக்காக காத்திருக்கும் நடிகர் சிலம்பரசன்
வெந்து தணிந்தது காடு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிலம்பரசன், இவர் நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் நேற்று திரைக்கு வந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
அனைத்து தரப்பு ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று இப்படம் முதல் நாளிலே பெரிய வசூல் சாதனை படைத்திருக்கிறது. அதன்படி இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 15 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தை தொடர்ந்து சிம்பு பத்து தல படத்தில் நடித்து வருகிறார், பெரிய எதிர்பார்ப்பை உண்டாகியுள்ள இப்படத்தின் கேட்டபில் வெந்து தணிந்தது காடு படத்திலும் நடித்திருக்கிறார் சிம்பு.
காட்டுப் பசியில் இருக்கிறேன்
இந்நிலையில் தற்போது சிம்பு அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் தான் அடுத்து நடிக்கப்போகும் படங்கள் குறித்து பேசியிருக்கிறார். “நான் தற்போது காட்டு பசியில் இருக்கிறேன், அந்த பசியை தணிக்கும் விதமான கதைகள் எனக்கு கிடைக்கவில்லை.
இது போன்ற ஒரு மனநிலை முன்பு இருந்தபோது மன்மதன் படம் செய்தேன், ஒருவேளை நானே தற்போது படத்தை இயக்க வேண்டி இருக்கும், அல்லது அது போன்ற ஒரு கதையை நான் தேட வேண்டும்” என பேசியிருக்கிறார்.
சன் மியூசிக் தொகுப்பாளராக இருந்த போது மகாலட்சுமி ரவீந்தர்