தொடங்கும் முன்பே கைவிடப்பட்ட சிம்புவின் திரைப்படம் ! மீண்டும் தள்ளிப்போகும் திரைப்படங்கள்?
கைவிடப்பட்ட சிம்புவின் புதிய திரைப்படம்
சிம்பு தற்போது மாநாடு திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு செம ஸ்பீட்டில் உள்ளார். குறிப்பாக சமீபத்தில் மாநாடு திரைப்படம் உலகளவில் 117 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார் தயாரிப்பாளர்.
அப்படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் பிஸியாக இருந்தார் சிம்பு.
இதற்கிடையே சிம்பு தந்தை TR சமீபத்தில் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் சிம்புவின் பத்து தல இறுதிக்கட்ட ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகவிருந்த கொரோனா குமார் திரைப்படம் கைவிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா குமார் திரைப்படத்தில் சிம்பு உடன்பாடு இல்லாத காரணத்தினாலும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷும் அப்படத்தை கைவிட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு பதிலாக இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சிம்புவின் புதிய திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஒர்க் அவுட் பிறகு அப்படியே புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிக்பாஸ் புகழ் ஷெரின்- செம வைரல்