பாடகர் மனோ நடிப்பதை நிறுத்தியது இவரால் தானா?- அவரே கூறிய தகவல்
பாடகர் மனோ
11 video 12 photo 1 news 2 video 3 photo 4 5 video 6 photo 7 news 7.30 video தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, அசாமி என 24,000 பாடல்கள் மற்றும் 3000 இசைக் கச்சேரிகள் என பாடி அசத்தியிருப்பவர் மனோ.
இளையராஜா இசையமைப்பில் மட்டுமே 500க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். பாடல்கள் பாடுவதை தாண்டி சில முன்னணி நடிகர்களின் படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். அதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மனோ அவர்கள் நடுவராகவும், தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

நடிக்காதது ஏன்
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் நிறைய படங்களில் நடிக்காததற்கு காரணம் என்ன என கேட்டுள்ளனர். அதற்கு அவர், நீங்கள் நடிக்க சென்றால் உங்களுக்காக பாடல்கள் காத்திருக்காது என இளையராஜா கூறினார்.
ஏனெனில் சிங்காரவேலன் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது நான் பாடிக்கொடுக்க வேண்டிய பாடல்கள் இருந்தது. ஆனால் 15க்கும் மேற்பட்ட பாடல்களை நான் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் பாடி கொடுத்தேன்.
அப்போது தான் இளையராஜா இப்படி கூறினார், அதனை நான் பெரிய எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

மகன் மடியில் தனது உயிரைவிட்ட மயில்சாமி- கடைசி நிமிடங்கள் குறித்து கூறிய எம்.எஸ்.பாஸ்கர்