நான் பாதி ரஜினி.. மேடையில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது மாவீரன் திரைப்படம் உருவாகி வருகிறது.
மடோன் அஸ்வின் இயக்கிவரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக அமைந்துள்ளது.

இவர் நேற்று நடைபெற்ற கவுதம் கார்த்திக்கின் August 16 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார்.
நான் பாதி ரஜினி
அப்போது மேடையில் ஹீரோ கவுதம் கார்த்தி குறித்தும், அவருடைய தந்தை நடிகர் கார்த்திக் குறித்தும் நடிகர் சிவகாத்திகேயன் பேசினார்.

இதில் 'கார்த்திக் சார் எந்த ஒரு நடிகரின் உடல் மொழியையும் வைத்து கொள்ளாத நடிகர்களில் ஒருவர். ஏன் அதற்க்கு நானே ஒரு உதாரணம். நாம் பாதி ரஜினி சார் உடல்மொழியை கொண்டு இருக்கிறேன். ஆனால், கார்த்திக் சார் அப்படி கிடையாது. தனக்கென்று தனி உடல்மொழியை உருவாக்கியுள்ளார்' என பேசியுள்ளார்.
பத்து தல படம் எப்படி இருக்கு.. முதல் விமர்சனம்