விஜய்யின் படம் வெளியாகாமல் மற்ற படங்களை பார்க்க மாட்டேன் - சிவகார்த்திகேயனின் வைரல் பதிவு
தலைவா
தமிழ் சினிமா உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் கடந்த சில வருடங்களாக விஜய்யின் திரைப்படம் சிக்கல் இல்லாமல் வெளிவந்ததில்லை. அப்படி விஜய் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தலைவா.
அப்படத்தின் டைட்டில் பிரச்சனை காரணமாக அப்படம் வெளியாவதில் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் தலைவா குறித்த தேதியில் வெளியாகவில்லை, மேலும் அப்படம் முதல் நாளே இணையத்தில் வெளியாகிவிட்டது.
சிவகார்த்திகேயனின் பதிவு
அப்போது தலைவா திரைப்படம் குறித்து பல்வேறு நட்சத்திரங்களும் தங்களின் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். அப்படி நடிகர் சிவகார்த்திகேயன் தலைவா குறித்த பதிவிட்ட விஷயம் தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ஆம், சிவகார்த்திகேயன் அவரின் டிவிட்டர் பக்கத்தில் “தலைவா திரைப்படம் வெளியாகும் வரை மற்ற எந்தஒரு திரைப்படங்களையும் பார்க்க போவது இல்லை. என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை, ஆனால் படம் விரைவில் வெளியாகும் என நம்புகிறேன்” என பதிவிட்டு இருந்தார்.
ராஷ்மிகாவுடன் நபர் ஒருவர் நேருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோ