ஒரே சூப்பர்ஸ்டார் காலம் எல்லாம் முடிந்தது.. பிரபல தயாரிப்பாளர் ட்வீட்
சூப்பர்ஸ்டார் பட்டம் பற்றி நேற்று ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது வைரல் ஆனது. சூப்பர்ஸ்டார் பட்டம் என்னைக்குமே தொல்லை தான், அந்த பட்டத்தை வேண்டாம் என நீண்ட காலத்திற்கு முன்பே கூறிவிட்டேன், ஆனால் நான் பயந்துவிட்டேன் என விமர்சித்தார்கள் என ரஜினி கூறினார்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு ட்விட்டரில் 'ஒரே சூப்பர்ஸ்டார் என்ற காலம் எல்லாம் முடிந்துவிட்டது' என பதிவிட்டு இருக்கிறார்.

SR பிரபு ட்வீட்
திரைப்பட தொழில் ஒரே சூப்பர்ஸ்டார் என்ற காலம் எல்லாம் எப்போதோ முடிந்துவிட்டது. ஒவ்வொரு ஸ்டாருக்கும் ஒரு மார்க்கெட் ஷேர் இருக்கும், ஒவ்வொரு படத்திற்கும் அதன் ரிலீஸ் தேதி, கன்டென்ட், போட்டி, combination உள்ளிட்ட விஷயங்கள் அதை தீர்மானிக்கும்.
சினிமா துறை இதை புரிந்துகொண்டால் ஒவ்வொருவரும் மாறி மாறி உதவுவார்கள், மொத்த துறையும் எல்லைகள் கட்ந்து வளரும். தெலுங்கு சினிமா அதற்கு சமீபத்திய உதாரணம்.
ஸ்டார்கள், ரசிகர்கள் என எல்லோரும் இதை புரிந்து கொள்ள வேண்டும். இது எல்லா இடங்களிலும் நடந்தால் மொத்த இந்திய சினிமா துறையும் சிறந்த தரத்திற்கு மாறும்.
The era of one superstar is over in film business. Every star has his own market share and for each film, the value varies based on release date, content, combination, competition, etc.,
— SR Prabu (@prabhu_sr) July 29, 2023
The industry which understands this start to support each other, uplift the whole market…
அனுஷ்கா ஷெட்டிக்கு சோதனை மேல் சோதனை! ஏன் இப்படி என புலம்பும் ரசிகர்கள்