மால் திறப்பு விழாவுக்கு சேலையில் வந்த ஸ்ரீலீலா.. நடந்த சம்பவத்தால் அவரே ஆச்சர்யம்
நடிகை ஸ்ரீலிலா தற்போது நேஷ்னல் சென்சேஷன் நடிகையாக வலம் வருகிறார். அவருக்கு இளம் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் இருக்கிறார்கள்.
தெலுங்கு சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தி, தமிழிலும் அவர் படங்கள் நடித்து ரசிகர்களை கவர தொடங்கி இருக்கிறார். மேலும் அவரது டான்ஸ்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

கடை திறப்பு விழா
இந்நிலையில் இன்று ஸ்ரீலிலா மால் திறப்பு விழா ஒன்றுக்காக சேலையில் அழகாக வந்திருந்தார். அவரை வரவேற்க செய்யப்பட்ட விஷயம் அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்து இருந்தது.
மேலே இருந்து ட்ரோன் மூலமாக ஸ்ரீலீலா மீது பூக்களை தூவி இருக்கின்றனர். அதை பார்த்து அவரே ஆச்சர்யம் அடைந்து விட்டார். மேலும் ஸ்ரீலீலாவை நேரில் பார்ப்பதற்காக அதிக அளவில் ரசிகர்கள் கூடி இருந்ததால் பாதுகாப்புக்கு போலீசாரும் ஏராளமாக வந்திருந்தனர்.
ஸ்ரீலீலா போலீசார் உடன் நின்று செல்பி எடுத்துக் கொண்டார். வீடியோக்களும் தற்போது வைரலாகி இருக்கிறது.
இஸ்ரேலிய பகுதியாக காசா மற்றும் மேற்குக் கரை: அமெரிக்கா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம் News Lankasri