மீண்டும் தனுஷை சீண்டிய நடிகர் சிம்பு! அப்படி என்ன அவர் பேசினார் தெரியுமா?
வெந்து தணிந்தது காடு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் சிலம்பரசன் தொடர்ந்து அவரின் திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
அப்படி அவர் நடிப்பில் நேற்று பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகியுள்ள இப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படத்தை விட வெந்து தணிந்தது காடு திரைப்படம் அதிக வசூலை குவித்து சாதனை படைத்திருக்கிறது.

தனுஷை சீண்டிய சிம்பு
இதனிடையே சமீபத்தில் அவர் அளித்திருந்த பேட்டி ரசிகர்களை புலம்ப வைத்திருக்கிறது. ஆம், சிம்பு பேசியதவாது “நான் ஹாலிவுட்டி திரைப்படத்தில் நடித்தால், ஒரு ஹாலிவுட்டி நடிகராகிவிடுவேன். பின் அடுத்து என்ன?
இப்போதுள்ள அனைவரும் நான் பெரிய ஆள் ஆகிவிட வேண்டும் என நினைத்து ஒடிக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கு பெரிய ஆள் என்றால் என்னவென்று தெரியவில்லை. எனது வேலை நான் சிறப்பாக செய்தால், அது தான் பெரிய ஆளாக உயர்த்தும்” என பேசிருக்கிறார்.
இதனால் தற்போது ரசிகர்கள் அவர் நடிகர் தனுஷை தான் சீண்டி பேசியிருக்கிறார் என பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

சன் மியூசிக் தொகுப்பாளராக இருந்த போது மகாலட்சுமி ரவீந்தர்