ஒரு ருபாய் கூட வாங்காமல் இன்னொரு படத்தில் நடித்த சூர்யா.. விக்ரமை தொடர்ந்து இன்னொரு பிரம்மாண்ட படம்
நடிகர் சூர்யா என்னதான் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் கமல்ஹாசன் அழைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக சில நிமிடங்கள் மட்டுமே தோன்றும் ஒரு ரோலில் விக்ரம் படத்தில் நடித்து இருந்தார்.
ரோலக்ஸ் என்ற அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சூர்யாவுக்கு கமல் ஒரு விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்சை கிப்ட்டாக கொடுத்தார்.
சூர்யா இந்த படத்தில் நடிப்பதற்காக சம்பளம் எதுவுமே வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஒரு பாலிவுட் படத்தில் சூர்யா ஒரு ருபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்து இருக்கிறார்.
மாதவன் நடித்து இருக்கும் ராக்கெட்ரி படத்தில் தான் சூர்யா சம்பளம் வாங்காமல் கெஸ்ட் ரோலில் நடித்து உள்ளார். அதே படத்தில் ஷாருக் கானும் கெஸ்ட் ரோலில் தோன்றி இருக்கிறார். அவரும் சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா மும்பையில் நடந்த ஷூட்டிங்கிற்கு விமான டிக்கெட் கட்டணம் கூட வாங்கவில்லை. கேரவன், அசிஸ்டன்ட் என எதற்காகவும் சூர்யா பணம் வாங்காமல் நடித்து கொடுத்தார் என மாதவன் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படமான ராக்கெட்ரி வரும் ஜுலை 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
விஜய்யின் 'வாரிசு' போஸ்டரும் காப்பியா? போட்டோவை எங்கிருந்து எடுத்திருக்கிறார்கள் பாருங்க

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.