டாப் 10 சிறந்த திகில் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை
தமிழ் திரையுலகில் அனைவரையும் கவர்ந்த ஒரு Genre திகில். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தமிழ் சினிமாவில் இந்த genre மாபெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக கடந்த 2005ஆம் ஆண்டிற்கு பிறகு திகில் genre படங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த டாப் 10 திகில் திரைப்படங்கள் என்னென்ன என்று நாம் பார்க்கவிருப்பது தான், இந்த கட்டுரை..
அவள்
சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அவள். மிலிந்த் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் ஒவ்வொரு காட்சியிலும் நம்ம பதபதைக்க வைத்தது. ஹாலிவுட் தரத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் தற்போது வரை தமிழ் சினிமாவில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட படங்களில் ஒன்றாக இருக்கிறது.
பிசாசு
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிசாசு 2. காதலையும், அன்பையும் இணைத்து எடுக்கப்பட்ட திகில் திரைப்படமாக இது அமைத்திருந்தது. படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியும் திகிலாக இருந்தாலும், சில காட்சிகள் நம்மை கண்கலங்காவும் வைத்தது. மிஷ்கினின் தலைசிறந்த இயக்கத்தில் ஒன்றாக இருக்கும் இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. மேலும், தற்போது பிசாசு 2 திரைப்படம் உருவாகி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாயா
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மாயா. அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நயன்தாராவின் நடிப்பு மிரட்டலாக இருந்தது. மேலும், இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஆரி, லட்சுமி, ரோபோ ஷங்கர், மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வித்தியாசமான திகில் கதைக்களத்தில் உருவாகி வெளியான இப்படம், இன்று வரை நயன்தாராவின் திரை வாழ்க்கையில் முக்கிய படங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
முனி
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து கடந்த 2007ல் வெளிவந்த திரைப்படம் முனி. நகைச்சுவை கலந்த திகில் கதைக்களத்தில் உருவான இப்படம், 6ல் இருந்து 60 வரை உள்ள அனைவரையும் கவர்ந்தது. இப்படத்தில் ராகவா லாரன்சுடன் இணைந்து கோவை சரளா, வேதிகா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
டிமாண்டி காலனி
அறிமுக இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் டிமாண்டி காலனி. நான்கு இளைஞர்கள் சேர்ந்து செய்யும் ஒரு காரியம், அவர்களை எப்படி பின்தொடர்ந்து கொள்கிறது என்பதே இப்படத்தின் கதை. விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் நகரும் இப்படம் மாபெரும் வெற்றியை தழுவியது. இயக்குனர் ஞானமுத்துவிற்கு இப்படம் நல்ல பெயரை திரையுலகில் உண்டாக்கியது.
காஞ்சனா
தமிழ் சினிமாவில் இன்று வரை எந்த ஒரு திகில் படத்தாலும் முறியடிக்க முடியாத வசூல் சாதனையை கொண்டுள்ள ஒரே திரைப்படம் காஞ்சனா. முனி படத்தின் வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவான இப்படம், மாபெரும் வெற்றியை அவருக்கு தேடி தந்தது. இதன்பின், தொடர்ந்து காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 ஆகிய படங்களும் வெளிவந்த பாக்ஸ் ஆபிசில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்திரமுகி
பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு பிரமாண்டமாக வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். திகில் மூட்டும் காட்சிகளும், நகைச்சுவை காட்சிகளும், வித்யாசாகரின் பாடல்களும் படத்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. மேலும், இப்படம் சுமார் 800 நாட்களை கடந்து தமிழகத்தில் ஓடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரண்மனை
சுந்தர். சி இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த படம் அரண்மனை. ஆண்ட்ரியா, ஹன்சிகா, வினய், சந்தானம் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. நகைச்சுவை, திகில், பாடல்கள் என அனைத்திலும் இப்படம் மக்களிடம் நல்ல விமர்சனங்களை வாங்கியது. மேலும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து வெளிவந்த அரண்மனை 2 மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்களும் தொடர் வெற்றியை சுந்தர்.சி கொடுத்துள்ளது.
தில்லுக்கு துட்டு
கடந்த 2016ஆம் ஆண்டு ராம்பாலா இயக்கத்தில் சந்தானத்தின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு. நகைச்சுவை கலந்த திகில் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. மேலும், இன்று வரை சந்தானத்தின் திரையுலக வாழ்க்கையில், தில்லுக்கு துட்டு திரைப்படம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெளிவந்த தில்லு துட்டு 2 திரைப்படமும் சந்தானத்திற்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.
யாமிருக்க பயமே
கிருஷ்ணா நடிப்பில் Deekay இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் யாமிருக்க பயமே. திகில் கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது. இப்படத்தில் கிருஷ்ணாவுடன் ஓவியா, கருணாகரன், ரூபா மஞ்சரி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா? Manithan
