பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து அதிரடியாக தனது சம்பளத்தை உயர்த்திய நடிகை திரிஷா!
பொன்னியின் செல்வன்
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன், இப்படத்தின் முதல் பாகமான PS-1 வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாக இருக்கிறது.
மேலும் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது, அதன்படி பொன்னியின் செல்வன் முன்பதிவிற்கு கிடைத்துள்ள வரவேற்பை வைத்து முதல்நாளில் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் இப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்டனர். அதன்படி ப்ரோமோஷனில் எடுக்கபட்ட நடிகை திரிஷாவின் புகைப்படங்கள் செம வைரலாகி வந்தன.
இதனிடையே இப்படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா அடுத்த திரைப்படத்திற்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம். திரிஷா அடுத்த திரைப்படம் ரூ. 2 கோடியை சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவர்சீஸ் நாட்டில் இதுவரை இல்லாத வசூல் சாதனையை படைக்கவுள்ள பொன்னியின் செல்வன்