வருமான வரித்துறையினரை வியந்து பார்க்க வைத்த நடிகர் விஜயகாந்த்- அப்படி என்ன நடந்தது தெரியுமா?
நடிகர் விஜயகாந்த்
தமிழ்நாடு ஒரு நல்ல அரசியல் தலைவரை இழந்துள்ளது என்பது தான் உண்மை. அரசியலில் நுழைந்த குறுகிய காலத்திலேயே எதிர்க்கட்சி அளவிற்கு உயர்ந்தார். வேகமாக சென்ற அவரது அரசியல் பயணம் உடல்நலக் குறைவால் அப்படியே சரிந்தது.
இப்போது கேப்டன் வெளியே வருவதே இல்லை, வீட்டிலேயே முடங்கியுள்ளார்.
அவர் தனது படங்களில் நாட்டின் மேல் எவ்வளவு பாசம் வைத்துள்ளார் என்பதை காட்டிக்கொண்டே இருந்தார். எங்களது கேப்டன் இப்படி ஆகிவிட்டாரே என தற்போது அவரது நிலைமையை கண்டு ரசிகர்கள் வருந்துகின்றனர்.
ரீவைண்ட்- வருமான வரித்துறை
நடிகர் விஜயகாந்த் தனது வாழ்க்கையில் நிறைய பேருக்கு உதவிகள் செய்துள்ளார், அது நமக்கு தெரிந்த விஷயம் தான். அரசியலில் கேட்பன் வளர்ந்துவந்த காலகட்டத்தில் அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததாம்.
காலை 9 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை சோதனை செய்துள்ளனர். அது முடியும்போது தலைமை அதிகாரி ராபர்ட், சார் உங்களைத் தொல்லை செய்ய நாங்கள் நினைக்கவில்லை, இது எங்களது கடமை.
உங்க ரெக்கார்டுகளை பார்க்கும் போது எவ்வளவு நல்லது செய்துள்ளீர்கள் என்பது தெரிகிறது, இதை நிறுத்திவிடாதீர்கள் என நெகிழ்ந்து பேசிவிட்டு சென்றாராம்.
தஞ்சாவூரில் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கப்போகும் பிரபல நடிகர்- யார் தெரியுமா?