பாடகி வாணி ஜெயராம் இறந்தது எப்படி? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டால் தெரியவந்த உண்மை
வாணி ஜெயராம்
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பழம்பெரும் பாடகி வாணி ஜெயராம் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது தலையில் ரத்த காயங்கள் இருந்த நிலையில் அது சந்தேக மரணம் என முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தபிறகு தான் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். அது பற்றி தீவிர விசாரணையும் நடைபெற்று வந்தது.

இறப்பிற்கான காரணம்
தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வந்திருக்கும் நிலையில் அதில் வாணி ஜெயராம் தலையில் ஏற்பட்ட காயத்தால் தான் இறந்திருக்கிறார் என தெரியவந்திருப்பதாக கூறி இருக்கின்றனர். அவரது படுக்கை அறையில் இருக்கும் சின்ன மேஜையில் தலை இடித்து காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் அவர் இறந்திருக்கிறார்.
மேலும் சிசிடிவியை ஆராய்ந்ததில் வேறு யாரும் அவரது வீட்டுக்கு வந்து செல்லவில்லை என்பதையும் உறுதி செய்திருக்கும் போலீசார் வாணி ஜெயராம் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என கூறி இருக்கின்றனர்.

நாங்க போனது ஹனிமூன் இல்லை.. திருமணத்திற்கு பின் ஹன்சிகா கூறிய விஷயம்
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri