வரலட்சுமியின் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி.. அப்படி என்ன நடந்தது!
வரலக்ஷ்மி சரத்குமார்
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போடா போடி படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, மாரி 2 ஆகிய படங்களில் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருந்தார். மேலும் சர்கார் மற்றும் சண்டக்கோழி ஆகிய படங்களில் வில்லியாக நடித்து மிரட்டியிருந்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தனக்கென்று தனி மார்க்கெட்டை நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த மதகஜராஜா திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
கடந்த ஆண்டு தனது காதலர் நிகோலாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு தனது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் ஜீ தமிழில் நடைபெற்று வரும் நடன நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.
வரலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ
இந்த நிலையில், கையில் கட்டுடன் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதில், அவர் ஒரு படத்தின் படப்பிடிப்பின் பொது சண்டை காட்சியில் தனது கட்டை விரலில் காயம் ஏற்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். மேலும் குணமடைந்தவுடன் விரைவில் படப்பிடிப்பில் இணைந்துவிடுவேன் என்று வரலக்ஷ்மி தெரிவித்துள்ளார்.