நீயா நானா 'அப்பா' பற்றி கருத்து சொன்ன விக்னேஷ் சிவன்! வைரல் பதிவு
நீயா நானா ஷோவில் பங்கேற்ற கணவன் மற்றும் மனைவி தான் கடந்த சில தினங்களாக இணையத்தில் ட்ரெண்ட்.
நீயா நானா 'அப்பா'
நீயா நானா ஷோவில் 'அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் vs கணவர்கள்' விவாதம் நடந்த போது ஒரு பெண் அவரது கணவர் படிப்பறிவில்லாதவர், குழந்தையில் மார்க் ரிப்போர்ட்டை வாங்கி ஒரு மணி நேரம் பார்த்துக்கொண்டிருப்பார், அந்த காலத்து ஆள் போலவே இருக்கிறார்.. இன்னும் கரெண்ட் ட்ரெண்டுக்கு வரவில்லை என மிக மோசமாக எல்லோர் முன்னிலையில் பேசினார்.
நான் வாங்காத மார்க்கை என் மகள் பெறுகிறாள் என்பதை தான் அப்படி ஆனந்தத்துடன் பாத்துக்கொண்டிருப்பேன் என அந்த அப்பா கூற, நெகிழ்ச்சியான கோபிநாத் உடனே அவருக்கு பரிசுகொடுப்பார் .
விக்னேஷ் சிவன் கருத்து
தற்போது நெட்டிசன்கள் அந்த அப்பாவை ஹீரோவாக கொண்டாடிவருகிறார்கள், மறுபுறம் அவரது மனைவியை ட்ரோல் செய்து வறுத்தெடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த விவகாரம் பற்றி கருத்து கூறி இருக்கிறார். அப்பா தோற்கவில்லை என மகள் கூறியதும், அவருக்கு அப்பா முத்தம் கொடுப்பார். அதை குறிப்பிட்டு தான் விக்னேஷ் சிவன் பேசி இருக்கிறார்.
"மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
❤️❤️❤️❤️❤️ மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று ❤️😍😍😇😇 https://t.co/AR4Z9pHaV3
— Vignesh Shivan (@VigneshShivN) September 12, 2022
Also Read: நீயா நானா விவகாரம்: ட்ரோலுக்கு உள்ளான மனைவிக்கு ஆதரவாக பேசிய பிரபலம்