அஜித் குமாரின் தந்தை மரணம்.. கண்கங்கி பேசிய விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்
அஜித்தின் தந்தை
முன்னணி நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் இன்று காலை மரணமடைந்தார். இவருடைய மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் இரங்கலை தெரிவித்தனர்.
ஏ.ஆர். முருக்தாஸ், ஏ.எல். விஜய். தயாரிப்பாளர் தியாகராஜன், நடிகர்கள் பிரசன்னா, மிர்ச்சி சிவா என பலரும் நேரில் சென்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய இரங்கலையும் தெரிவித்தார்.
எஸ்.ஏ. சந்திரசேகர் இரங்கல்
இந்நிலையில், நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல மூத்த இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னுடைய இரங்கலை தற்போது தெரிவித்துள்ளார்.
இவர் கூறியதில் ' அஜித் குமார் தந்தையின் மரண செய்தியை கேட்டு வருத்தமடைந்தேன். எவ்வளவு வயதானாலும் அப்பா அப்பா தான். அந்த இழப்பு மிகவும் இழப்பாகும். தந்தையை இழந்து தவிக்கும் நடிகர் அஜித் குமாருக்கு மன ஆறுதலை தரும்படி இறைவனை வேண்டிக்கொள்கிறேன்' என கூறியுள்ளார்.
தந்தையின் உடலை மயானத்திற்கு தூக்கி சென்ற அஜித்.. கண்கலங்க வைக்கும் புகைப்படம்