தல என சொன்னதும் ஆரவாரம்.. டென்ஷன் ஆகி திட்டிய விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி எந்த விதமான சினிமா பின்னணியும் இல்லாமல் நடிகராக வந்து தற்போது ஒரு முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார். அவரது நடிப்பு மட்டுமின்றி அவரது மேடை பேச்சுகளுக்கும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர் தொடர்ந்து மேடையில் பேசக்கூடியவர். அப்படி அவர் இன்று சென்னை லயோலா கல்லூரியில் ஒரு விழாவில் பேசினார்.
திட்டிய விஜய் சேதுபதி
"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை"
என திருக்குறளை சொல்லி அது பற்றி பேசி கொண்டிருந்தார் விஜய் சேதுபதி. அப்போது தலை என்றதும் மாணவர்கள் ஆரவாரம் செய்தனர்.
"தேவையில்லாம கத்தாதீங்க. என்ன பேசிட்டு இருக்கோம். என்னா நீங்க" என கோபமாக கூறினார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
திருத்த முடியாது.. யாரை திட்டி இப்படி ஒரு பதிவு போட்டார் சாந்தனு?