2 ஆண்டுகளாக வெளிவராமல் இருந்த விஜய் சேதுபதி திரைப்படம் திரைக்கு வருகிறது.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
விஜய் சேதுபதி
முன்னணி ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விடுதலை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இப்படத்தை வெங்கடா கிருஷ்ணா என்பவரை இயக்கியுள்ளார். மெகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்தில் வில்லனாக இயக்குனர் மகிழ் திருமேனி நடித்துள்ளார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
இப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திரைக்கு வரவிருந்தது. இப்படத்தின் ட்ரைலர் கூட வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், சில காரணங்களால் திடீரென இப்படம் ரிலீஸ் ஆகவில்லை.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்து வந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் தற்போது திரை வர தயாராகியுள்ளது. ஆம், விரைவில் இப்படம் திரையரங்கில் வெளிவரவுள்ளது.இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
படம் தோல்வியடையும் என தெரிந்தும் நடித்த அஜித்.. காரணம் தயாரிப்பாளர் தானா

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
