கேரள ரசிகர்கள் கொடுத்த அன்பு- ஸ்பெஷல் வீடியோவாக வெளியிட்ட நடிகர் விஜய்
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய்.
தொடர்ந்து படங்கள் நடிப்பார், 100 படங்களுக்கு மேல் நடிப்பார் என ரசிகர்கள் ஆசையுடன் காத்துக் கொண்டிருக்க அவரோ தனது 69வது படத்துடன் நடிப்பை நிறுத்திவிட இருப்பதாக அறிவித்துவிட்டார்.
சினிமாவில் அவரின் படத்தை நம்பி தயாரிப்பு, விநியோகம் செய்யும் பலர் உள்ளார்கள், அவர்களுக்க எல்லாம் விஜய் நடிப்பை நிறுத்தியது மிகவும் நஷ்டமான விஷயம் என்றே கூறலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் கர்ப்பமாக இருக்கும் மீனா, விஜயா செய்யப்போவது என்ன?- இனி கலவரம் தானா, வைரலாகும் போட்டோ
தற்போது விஜய் நடிக்கும் அவரது 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார், படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வந்தது, தற்போது அங்கு நடந்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக தெரிகிறது.
ஸ்பெஷல் வீடியோ
விஜய் கேரளா சென்ற நாள் முதல் ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே இருக்கிறார்கள். தினமும் விஜய்யும் படப்பிடிப்பு செல்லும் முன், அதன்பிறகு என ரசிகர்களை சந்தித்த வண்ணம் இருந்தார்.
தற்போது கோட் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம், இன்றோடு படப்பிடிப்பு முடிய விஜய்யும் சென்னை கிளம்ப இருக்கிறார். இதனால் கடைசியாக கேரளா ரசிகர்களை சந்தித்து தனக்கு கொடுத்த அன்பிற்கு நன்றி என பேசியுள்ளார்.
அதோடு ரசிகர்களுடன் எடுத்த செல்பி வீடியோ தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு நன்றி கூறியுள்ளார். இதோ அவரே ஷேர் செய்த வீடியோ,