தற்கொலை முயற்சி செய்தேனா.. விஜய் டிவி சீரியல் நடிகர் விளக்கம்
விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஒரு சின்ன ரோலில் நடித்து வந்தவர் ராகவேந்திரன் புலி. அவர் அந்த தொடரில் இருந்து திடீரென வெளியேறினார். தன் ரோலுக்கு முக்கியத்துவம் இல்லை, சம்பளமும் மிக மிக குறைவாக தருகிறார்கள் என சொல்லி பரபரப்பான புகார் சொல்லி இருந்தார்.
அதன் பின் அவர் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார். மேலும் அவர் ஒருதலை காதல் தோல்வி ஆனது தான் இந்த முடிவுக்கு காரணம் என்றும் கூறினார்.

சமீபத்தில் அவர் தற்கொலை முயற்சி செய்ததாக செய்தி பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என சொல்லி இன்ஸ்டாகிராமில் விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார் அவர்.
நான் பாசிட்டிவ் ஆக தான் இருக்கிறேன், உடல்நிலை மோசமடைந்ததாக மட்டுமே நான் பதிவிட்டேன், அதை தற்கொலை முயற்சி என தவறாக செய்தி பரப்பாதீர்கள் என கூறி இருக்கிறார்.