இதுக்கு நீங்க சரிபட்டு வரமாட்டீங்க.. விக்ரமிடம் கூறிய இயக்குனர்! எதற்காக தெரியுமா??
விக்ரம்
நடிகர் சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் விதவிதமான கெட்டப்புகளில் நடித்து கலக்கி வருபவர். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் "பொன்னியின் செல்வன் 2".
மேலும் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் "தங்கலான்" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விக்ரமிடம் பிரபல இயக்குனர், கதை ஒன்றை எழுதி அதற்கு நீங்கள் செட் ஆக மாட்டீர்கள் என கூறிய தகவல் வெளிவந்துள்ளது.
நடிகர் விக்ரம் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் "சாமுராய்" படத்தில் நடித்திருந்தார். அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
நீங்க சரிபட்டு வரமாட்டீங்க
இருப்பினும் நடிகர் விக்ரம் அதனை வெற்றி படமாக கருதினார். இதனால் இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு ஒரு பெரிய வீட்டை ஆஃபீஸாக மாற்றி கொடுத்து தனக்கு ஒரு கதை எழுத கூறியுள்ளார்.
கதையை எழுதி முடித்த பிறகு நேராக சாமி பட ஷூட்டிங்கில் இருந்த விக்ரமை சந்தித்தார். அவரிடம் கதை தயாராகி விட்டது ஆனால் நீங்கள் இந்த கதைக்கு செட் ஆக மாட்டீங்க. இது சிம்பிளாக இருக்க வேண்டியது என கூறியுள்ளார்.
[K478OS ]
இதனை நடிகர் விக்ரம் புரிந்துகொண்டு இயக்குனர் பதிலை ஏற்றுக் கொண்டார். அந்த கதை சங்கர் தயாரிக்க பரத் மற்றும் சந்தியா நடித்திருந்த "காதல்" திரைப்படம். இதை இயக்குனர் பாலாஜி பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
சினிமாவை விட்டு விலக முடிவு செய்த லோகேஷ் கனகராஜ், அதிர்ச்சியில் ரசிகர்கள்