3 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு, திடீரென மனுதாக்கல் செய்த சீரியல் நடிகை சித்ராவின் அப்பா- பரபரப்பு புகார்

By Yathrika Aug 16, 2023 04:21 PM GMT
Report

நடிகை சித்ரா

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினி, நடிகை, நடன கலைஞர், மாடலிங் என பல திறமைகளை வெளிக்காட்டி பிரபல நாயகியாக வலம் வந்த நடிகை சித்ரா.

சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்த ஆரம்பித்த இவருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

இதில் முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு அழகாக உயிர் கொடுத்து நடித்திருந்தார், அவரின் நடிப்பாலேயே அந்த கதாபாத்திரத்திற்கு நல்ல ரீச் கிடைத்தது. தொடர் முடிவும் வரை முல்லையாக நடிப்பார் என்று பார்த்தால் திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.

இவரின் இறப்பு தமிழக ரசிகர்கள் அனைவருக்குமே பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

3 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு, திடீரென மனுதாக்கல் செய்த சீரியல் நடிகை சித்ராவின் அப்பா- பரபரப்பு புகார் | Vj Chithra Father New Petition In Court

புதிய மனு தாக்கல்

சித்ரா தற்கொலை செய்துகொண்ட வழக்கு நீதிமன்றனத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையில் சித்ராவின் தந்தை மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். சித்ரா வழக்கு திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கு.

அதை சென்னையில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், விசாரணையை விரைந்து மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.

விசாரணையை இழுத்தடிக்க ஹேம்நாத் வேண்டுமென்றே பல மனுக்களை தாக்கல் செய்து இருக்கிறார் என்றும் மனு தாக்கலில் குறிப்பிட்டுள்ளார். 

3 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு, திடீரென மனுதாக்கல் செய்த சீரியல் நடிகை சித்ராவின் அப்பா- பரபரப்பு புகார் | Vj Chithra Father New Petition In Court

தமிழகத்தில் அடுத்தடுத்து தனது சொந்த ஓட்டல்களை மூடிய நடிகர் கருணாஸ்- திடீரென என்ன ஆனது? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US