நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண இடம் மாறியதற்கு இதுதான் காரணமா?- வெளிவந்த விவரம்
நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவரது திருமணம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்க்க தான் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இவர்களது திருமணம் குறித்து ஒரு விஷயம் கூட எளிதில் கசியவில்லை. திருமண பத்திரிக்கை மட்டும் பாலிவுட்டின் பிரபல நிறுவனம் வெளியிட்டதால் அனவைருக்கும் தெரிந்தது.
வரும் ஜுன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் Mahabs என்கிற Five Star Hotelல் மிகவும் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. அவர்களது திருமணத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
மாற்றப்பட்ட இடம்
முதலில் இவர்களது திருமணம் திருப்பதியில் நடப்பதாக இருந்தது, ஆனால் திடீரென இடத்தை மாற்றிவிட்டனர். காரணம் திருப்பதியில் 150 நபர்களுக்கு மேல் திருமணத்தில் கலந்துகொள்ள அனுமதி இல்லையாம்.
விருந்தினர்கள் லிஸ்ட் அதிகமாக இருக்கவே இந்த ஜோடி இடத்தை மாற்றியுள்ளார்களாம்.
நிகழ்ச்சிக்கு Walking Stickவுடன் வந்த தொகுப்பாளினி டிடி- ஷாக்கான ரசிகர்கள், புகைப்படம் இதோ