அய்யோ கொடுமை.. மாரிமுத்துதின் நிறைவேறாத ஆசை!.. இப்படியொரு நிலைமையா
மாரிமுத்து
இயக்குனராக வலம் வந்த மாரிமுத்து, மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
பல படங்களில் நடித்து வந்த இவர் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமானார்.
இன்று எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் செய்து கொண்டு இருந்த போது மாரிமுத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
தற்போது இவரது இறப்பிற்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்
நிறைவேறாத ஆசை
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மாரிமுத்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், திருமணமாகி 27 வருடங்களாக வாடகை வீட்டில் தான் வாழ்ந்து வந்தோம். இப்பொது நான் சொந்த வீடு ஒன்றை வாங்கியுள்ளேன்.
சொந்த வீடு என்பது அது ஒரு கனவு மாதிரி, மற்ற ஊரில் இருந்து சென்னையில் வந்த வாழ்பவர்களுக்கு சொந்த வீடு கனவு போன்று தான் இருக்கும். என்னுடைய கனவு நிறைவேறி விட்டது. தற்போது மணப்பாக்கம் பக்கத்தில் வீடு வாங்கி இருக்கிறேன்.
அந்த வீட்டிற்கு என்னுடைய மனைவி பெயரை வைத்துள்ளேன் என்று மாரிமுத்து கூறியுள்ளார். இப்படி ஆசை ஆசையாய் கட்டிய வீட்டிற்குள் அவர் செல்ல முடியாமல் போனது அனைவர்க்கும் மிகுந்த வேதனை அளிக்கிறது.
எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம்